தேவையானப் பொருட்கள்
♦ கத்திரிக்காய் - 5
♦ பெரிய வெங்காயம் - 1
♦ பூண்டு - 10 பற்கள்
♦ கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
♦ புளி - சிறிய எலுமிச்சை அளவு
♦ தேங்காய் - 5 பத்தை
♦ உப்பு - தேவையான அளவு
♦ நல்லெண்ணை - தாளிக்க
♦ சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
♦ பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
♦ புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும். தேங்காய் பத்தைகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
♦ வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய்களின் காம்பினை நீக்கி விட்டு, பின்புறத்தை நான்காக கீறவும். (முழுவதுமாக காயை நறுக்காமல், முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும்)
♦ எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
♦ சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
♦ பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும். காயை வதக்கும் போது தீயை சிறிதாக வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும்.
♦ காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
♦ குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
♦ பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான புளி குழம்பு 30 நிமிடங்களில் தயார்.
No comments:
Post a Comment