Monday, April 7, 2008

தக்காளி சட்னி



தேவையானப் பொருட்கள்


தக்காளி (பெரியது) - 3 (நறுக்கிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் (பெரியது)- 1(நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவையான அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, சமையல் எண்ணெய் - தாளிக்க

செய்முறை

♦ முதலில் மிளகாய் வற்றலை 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
♦ அதை எடுத்துவிட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.கொஞ்சம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் மிளகாய் வற்றல்,உப்பு,வதக்கிய வெங்காயம்,தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
♦ கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலையை தாளித்து போட்டு பரிமாறவும்.

தேங்காய் சட்னி




தேவையானப் பொருட்கள்


தேங்காய்த் துருவல் - 3/4 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
ப.மி (அ) மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையான அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, சமையல் எண்ணெய் - தாளிக்க

செய்முறை

♦ மிக்ஸியில் பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்,உப்பு,பொட்டுக்கடலை,தேங்காய்த்தூருவலைப் போட்டு அரைக்கவும்.
♦ கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலையை தாளித்து போட்டு பரிமாறவும்.இதில் 4 சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து, நறுக்கி வதக்கிப் போடலாம்.

Friday, March 7, 2008

வாழைப்பூ கூட்டு



தேவையானப் பொருட்கள்

வாழைப்பூ பொடியாக நறுக்கியது-- 2 கப்
பயத்தம் பருப்பு-- 1/2 கப்
வெங்காயம்-- 1
பச்சைமிளகாய்-- 3
மஞ்சள் தூள்-- 1/4 டீஸ்பூன்
தேங்காய்துருவல்-- 4 டீஸ்பூன்
சீரகம்-- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை-- சிறிது
உப்பு-- தேவையான அளவு
எண்ணெய்-- தாளிக்க

செய்முறை
♦பயத்தம் பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
♦எண்ணெய்யை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும்.
♦பிறகு அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ,மஞ்சள் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
♦வாழைப்பூ வெந்ததும் வேகவைத்த பருப்பு சேர்க்க வேண்டும்.
♦கடைசியில் தேங்காய் துருவலையும் சீரகத்தையும் அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.

குறிப்பு;-
வாழைப்பூவை நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் வாழைப்பூ சீக்கிரம் கருக்காது.

Sunday, March 2, 2008

வெங்காய பக்கோடா



தேவையானப் பொருட்கள்


கடலை மாவு-- 1 கப்
அரிசி மாவு-- 1/4 கப்
பெரிய வெங்காயம்-- 1
இஞ்சி-- 1துண்டு
பச்சை மிளகாய்-- 2
பூண்டு-- 4 பல்
கறிவேப்பிலை-- சிறிது
மல்லித்தழை-- சிறிது
உப்பு-- சுவைக்கேற்ப
எண்ணெய்-- தேவையான அளவு

செய்முறை
♦ வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள்.
♦ இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள் பூண்டை நசுக்கி கொள்ளவும்.
♦ எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக் கொள்ளுங்கள்.
♦ எண்ணெயைக் காயவைத்து,ஒற்றை ஒற்றையாக உதிர்த்து விடுங்கள்.
♦ பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.

Thursday, February 28, 2008

பயத்தம்பருப்புப் பாயசம்

தேவையானப் பொருட்கள்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பெரிய தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
♦ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
♦ தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுத்து தனித்தனியாக வைக்கவும்.
♦ வெல்லத்தைப் பொடியாக நுணுக்கிக் கொள்ளவும்.
♦ பெரிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கொண்டு சீவி வைத்த வெல்லம், வேக வைத்த பருப்பு சேர்த்து தீயை மிதமாக வைத்து அதில் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றவும்.
♦ வெல்லம் கரைந்தவுடன் ஏலப் பொடி, மற்றும் முதலில் எடுத்த பால் சேர்த்து கிளறி இறக்கவும்

கத்திரிக்காய் புளிக் குழம்பு



தேவையானப் பொருட்கள்


♦ கத்திரிக்காய் - 5
♦ பெரிய வெங்காயம் - 1
♦ பூண்டு - 10 பற்கள்
♦ கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
♦ புளி - சிறிய எலுமிச்சை அளவு
♦ தேங்காய் - 5 பத்தை
♦ உப்பு - தேவையான அளவு
♦ நல்லெண்ணை - தாளிக்க
♦ சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
♦ பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

♦ புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும். தேங்காய் பத்தைகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
♦ வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய்களின் காம்பினை நீக்கி விட்டு, பின்புறத்தை நான்காக கீறவும். (முழுவதுமாக காயை நறுக்காமல், முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும்)
♦ எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
♦ சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
♦ பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும். காயை வதக்கும் போது தீயை சிறிதாக வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும்.
♦ காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
♦ குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
♦ பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான புளி குழம்பு 30 நிமிடங்களில் தயார்.

Thursday, February 7, 2008

பாதுஷா


தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 2கப்
வெண்ணெய் -- 1/2 கப்
பேக்கிங் பவுடர் -- 1/2.டீஸ்பூன்
சர்க்கரை -- 2 கப்
தயிர் -- 1 டீஸ்பூன்
சமையல்.எண்ணெய் -- 2 கப்

செய்முறை

♦ மைதா மாவுடன் பேக்கிங் பவுடர்,தயிர்,வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
♦ இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
♦ ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு பாதுஷக்களை பொன்னிறமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
♦ சக்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சி கொள்ளவும்.
♦ பாதுஷக்களை இப்பொழுது சர்க்கரைப் பாகில் போடவும். அதன் மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.
♦ இப்பொழுது சுவையான பாதுஷா ரெடி.