தேவையானப் பொருட்கள்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பெரிய தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
♦ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
♦ தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுத்து தனித்தனியாக வைக்கவும்.
♦ வெல்லத்தைப் பொடியாக நுணுக்கிக் கொள்ளவும்.
♦ பெரிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கொண்டு சீவி வைத்த வெல்லம், வேக வைத்த பருப்பு சேர்த்து தீயை மிதமாக வைத்து அதில் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றவும்.
♦ வெல்லம் கரைந்தவுடன் ஏலப் பொடி, மற்றும் முதலில் எடுத்த பால் சேர்த்து கிளறி இறக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment